சென்னையில் ஜூன் 11-ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு குறைதீர்  முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு குறைதீர்  முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஜூன் 11 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம். நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வரமுடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்க நடவிடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com