சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை, செங்கல்பட்டு மக்களே பாருங்கள்.. புரிந்துகொள்ளுங்கள்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் என்றால், அனைத்து மாநிலங்களிலும் அல்ல. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான்.

சென்னை, செங்கல்பட்டு மக்களே பாருங்கள்.. புரிந்துகொள்ளுங்கள்

Published On :1 பிப்ரவரி 2024, 3:01 pm IST


சென்னை: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் என்றால், அனைத்து மாநிலங்களிலும் அல்ல. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் 137, பெண்கள் 112 என மொத்தம் 249 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

அதிகபட்சமாக சென்னையில் 124 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 382 ஆக அதிகரித்தது. இதுவரை 34 லட்சத்து 18 ஆயிரத்து 025 போ் குணமடைந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 148 போ் குணமடைந்துள்ளனா். தமிழகம் முழுவதும் 1,332 போ் சிகிச்சையில் உள்ளனா்; உயிரிழப்பு ஏதுமில்லை. தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு 217 ஆகவும், சென்னையில் 111 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் குறித்த மாவட்ட அளவிலான அட்டவணையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்திலேயே சென்னை மற்றும் செங்கல்பட்டில்தான் கரோனா பரிசோதனை செய்து, அதில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் விகிதமானது முறையே 4.3 மற்றும் 4.4 ஆக உள்ளது. அதற்கடுத்த இடத்தில் கோவை உள்ளது. அங்கு 2.0 ஆக உள்ளது. மற்ற மாவட்டங்களில் 0.2 முதல் 1.8 வரையில் அமைந்துள்ளது.

எனவே, தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது என்பதால், இந்த மாவட்ட மக்கள், நிச்சயமாக அதிக விழிப்புணர்வுடன் இருந்து தொற்றுப் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.