மேட்டூர்: காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 2,597கன அடியாக குறைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,996 கனஅடியாக அதிகரித்தது. புதன்கிழமை மழை தனிந்ததால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,597கனஅடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 112.11அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 111.35 அடியாக சரிந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 80.34 டி.எம்.சியாக உள்ளது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.
இதையும் படிக்க | 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்