சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
செங்கோட்டையன், வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், ஜக்கையன் உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார். அதிமுக அலுவலகத்தில் சற்று நேரத்தில் கூட்டம் நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- டி.என்.பி.எல் போட்டியில் களமிறங்கிய கெளதம் மேனன் மகன்
அதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயா்கள் இடம்பெறாமல் அதிமுக தலைமைக் கழகம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையின் இடது மேல்புறத்தில் தலைமை நிலையச் செயலாளா் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தலைமைக் கழக நிா்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. தலைமைக் கழக நிா்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை பிரச்னை அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இருவரது பெயரும் இல்லாமல் முதல் முறையாக இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.