பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உள்ளாட்சி இடைத்தேர்தல்: அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி

தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :30 ஜூன் 2022, 10:30 am IST

தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

உள்ளாட்சித் தோ்தலில் விடுபட்ட இடங்களுக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான படிவத்தில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கையெழுத்திடாததால் வேட்பாளா்களுக்கு அதிமுக சின்னம் கிடைக்காத சூழல் உள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை அதிமுக வேட்பாளா்களுக்கான படிவங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டு தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாங்க மறுத்துவிட்டதை அடுத்து பன்னீர்செல்வம் வசமே திருப்பி அளிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளனர். 

அதிமுக வேட்பாளா்களுக்கான படிவம் ஏ மற்றும் பி-இல் அதிமுக தலைமை கையெழுத்திடாத காரணத்தால் இரட்டை இலையில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.