அபுதாபி லுலு நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 3,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

அபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்நாட்டில் உள்ள லுலு நிறுவனத்துடன் ரூ. 3,500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 
அபுதாபி லுலு நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 3,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்து
Updated on
1 min read

அபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்நாட்டில் உள்ள லுலு நிறுவனத்துடன் ரூ. 3,500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

நான்கு நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதலில் துபை சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசி தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும், ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சனிக்கிழமை கையெழுத்தாகின.

அதைத் தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ள நிலையில், அமீரக தொழில் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்தார். 

பின்னர், ஐக்கிய அரபு அமீரக முதலீட்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு தமிழகத்தில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கு லுலு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com