ராஜஸ்தானில் மே 8 முதல் மீண்டும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் தக்கித்துவந்த நிலையில், மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் சில இடங்களில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெயிட்ட தகவலில்,
ராஜஸ்தானின் சில பகுதிகளில் மீண்டும் நாளை முதல் வெப்ப அலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜோத்பூர், பிகானர், ஜெய்ப்பூர் மற்றும் பரத்பூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 44 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பார்மர் பகுதியில் இன்று அதிகபட்சமாக 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மக்களை வாட்டி வதைத்து வரும் அதிக வெப்பம் காரணமாக, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்..! ஒலிம்பிக்கில் சேர்க்கவும் திட்டம்!

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



