ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

சென்னையை சுட்டெரிக்கும் சூரியன்: காரணம் இருக்கிறதாம்

கத்திரி தொடங்கிய நாளில் மழையும் தொடங்கி சென்னை உள்ளிட்ட இடங்களை குளு குளுவென மாற்றியிருந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் சென்னையை சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. 

News image

சென்னையை சுட்டெரிக்கும் சூரியன்: காரணம் இருக்கிறதாம்

Updated On :25 மே 2022, 3:19 pm IST


கத்திரி தொடங்கிய நாளில் மழையும் தொடங்கி சென்னை உள்ளிட்ட இடங்களை குளு குளுவென மாற்றியிருந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் சென்னையை சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்னவென்றால், சென்னையில், கடற்காற்று தாமதமாக வீசத் தொடங்குவதால் அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 11 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாமக்கல், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரியை தாண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 8 மணிக்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுவதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் ஆகிறது. கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைதால் அதுவரை வெயில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பகலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் நிலவுதால் இரவிலும் புழுக்கம் காணப்படுகிறது. கடற்காற்று வீசத் தாமதமாவதால் தான் சென்னையில் வெயில் கொளுத்துகிறது என்று கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.