
நிறைவுபெற்றது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது.
இதையடுத்து, நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ஆம் தேதிகள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க.. நயன்தாரா திருமணத்துக்கு நோ சொன்னதா திருப்பதி? வெளியாகும் பரபரப்புக் காரணங்கள்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மே 6 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறவிருக்கிறது.
இதையும் படிக்க.. வாடிக்கையாளர்களை சில நிமிடங்கள் கோடீஸ்வரர்களாக்கிய எச்.டி.எஃப்.சி.: என்ன நடந்தது?
விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியானதும், 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருக்கிறது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 1 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...