நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மாலையில் மழை அதிகரிக்கும்! 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மாலையில் மழை அதிகரிக்கும்! 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

Updated On :1 நவம்பர் 2022, 4:15 pm IST

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால், வானிலை மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை  விடுத்துள்ளது. 

வடதமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 12 செ. மீட்டர் முதல் 21 செ. மீட்டர் வரை மழை பதிவாகும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் மிதமான மழை தொடர்ந்து நீடிக்கிறது. 

காலை முதல் தற்போதுவரை அதிகபட்சமாக பெரம்பூரில் 12 செ. மீட்டர், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கும்பிடிப்பூண்டி, பொன்னேரி,  ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அயனாவரம் 9 செ.மீட்டர், நுங்கம்பாக்கம், சோழவரம், தக்கலை ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.