அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசிவருகிறார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:13 pm IST


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசிவருகிறார். 

இரண்டு நாள்கள் பயணமாக சென்னை வந்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

மேற்கு வங்க இல.கணேசனின் அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். 

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை புரிந்தார். அவரை மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

Story image

முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படத்தை வணங்கி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Story image

இந்த சந்திப்பில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இதில், நாடாளுமன்ற தேர்தல், மாநில கட்சிகள்  பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Story image

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்று, பொதுக்கூட்டத்திலும் உரையாற்றியிருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.