கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி

சென்னை ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக குளிர்பதனப் பெட்டி வெடித்து மூச்சுத் திணறி 3 பேர் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :4 நவம்பர் 2022, 2:49 am

DIN

சென்னை ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக குளிர்பதனப் பெட்டி வெடித்து மூச்சுத் திணறி 3 பேர் உயிரிழந்தனர். 

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோதண்டராமன் நகரில் உள்ள கிரிஜா என்பவரது வீட்டில் குளிர்பதனப் பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டதில்
கிரிஜா (63), அவரது தங்கை ராதா (55), உறவினர் ராஜ்குமார் (48) ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.