சென்னை 98% இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது: அமைச்சர் சேகர்பாபு

வெள்ள நீர் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதால் சென்னையில் 98% இயல்பு நிலை திரும்பி விட்டதாக அமைச்சர் சேரகர் பாபு தெரிவித்தார். 
சென்னை 98% இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது: அமைச்சர் சேகர்பாபு
Published on
Updated on
1 min read

வெள்ள நீர் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதால் சென்னையில் 98% இயல்பு நிலை திரும்பி விட்டதாக அமைச்சர் சேரகர் பாபு தெரிவித்தார். 

சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. திருவிக நகர் மண்டலத்தில் இதனை தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 

வெள்ள தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டதால் சென்னையில் 98% பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை அகற்றுவதோடு மருத்துவ முகாம்களை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் சென்னையில் இன்று பெருநகர மாநகராட்சியுடன் சுகாதாரத் துறையும் இணைந்து 200 வார்டுகளில் மழைக் கால மருத்துவ முகாமை நடத்துகிறது. 

சென்னையில் 156 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன, மீதியுள்ள 44 கிமீ தூரத்துக்கு பணிகள் முடிந்தால் அடுத்த ஆண்டு பருவ மழைக்கு பிரச்னை வராது. 

பள்ளங்கள் உள்ள பகுதிகளில் சாலைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை முடிந்தவுடன் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். 

சென்னையில் நேற்று விபத்துக்குள்ளான பாழடைந்த கட்டடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com