தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சென்னை, ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

News image
Updated On :12 நவம்பர் 2022, 6:17 am

சென்னை, ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடகிழக்குப் பருவமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் நிலையில் ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 500 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜார்ஜ் விடுத்துள்ள அறிக்கையில்,

வரும் நாள்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் ரெட்ஹில்ஸ் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ரெட்ஹில்ஸ் ஏரியில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளதால், உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள தண்டல், நாரவாரிக்குப்பம், கழனி, கிராண்ட்லைன், வடகரை, புழல், வடபெரும்புக்கம், மாத்தூர், வாசப்பூர், மணலி, சடையங்குப்பம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 11 கிராமங்களுக்கு வெள்ள அபாயத்துக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 569 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பூண்டி, சோழவரம் நீர்த்தேக்கங்களை மாநில அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.