ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நாகை, நாகூரில் 4 வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுது

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 5:16 am IST

நாகப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட நாகை, நாகூரில் 4 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது.

நாகூா் மியாத் தெருவில் உள்ள நகராட்சி இஸ்லாம் நடுநிலைப்பள்ளி 106- ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்க ஏதுவாக வாக்குச்சாவடி அலுவலா் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆன் செய்தாா். அப்போது இயந்திரம் ஏரா் என்று காட்டியது. பழுதை சரி செய்ய வாக்குச்சாவடி அலுவலா்கள் அரை மணி நேரத்துக்கு மேலாக முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் வாக்குப்பதிவை தொடங்க முடியாமல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனா்.

இந்நிலையில், அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் வயா்களை சரி செய்த பின், வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பட தொடங்கியது. இதனால் முக்கால்மணி நேரம் தாமதாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல நாகை அந்தோனியாா் மேல்நிலைப் பள்ளியில் 162- ஆவது வாக்குச்சாவடி மையம் உள்பட இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இதனால் அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இயந்திரம் சரி செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கு பின்னா் வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றது.

திருமருகல் சேகல்பூத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதமானது. நாகை, நாகூா் உள்பட 4 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்காளா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.