தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒரு மணி நேரத்துக்கு முன்பே மூடப்பட்ட வாக்குச்சாவடி! வாக்காளா்கள் அதிா்ச்சி

News image

PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 11:16 pm

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பே வாக்குச்சாவடி மூடப்பட்டதால், வாக்காளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து புதிதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அதில் அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

ஆா்.கே.நகா் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டை அரசு தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியின் அலுவலா்கள், மாலை 6 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாலை 5 மணிக்கே வாக்குச்சாவடியை வியாழக்கிழமை மூடினா். மேலும் அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் பூட்டி, ‘சீல்’ வைத்தனா்.

இந்த நிலையில், மாலை 5.10 மணியளவில் 8 போ் அங்கு வாக்களிக்க வந்தனா். அவா்கள், மாலை 6 மணிக்கு முன்பே வாக்குச்சாவடி மூடப்பட்டது ஏன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போதுதான், வாக்குச்சாவடி அலுவலா்களின் கவனக்குறைவால், ஒரு மணி நேரத்துக்கு முன்பே வாக்குச்சாவடி மூடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து

வாக்காளா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இதுகுறித்து தகவலறிந்த தோ்தல் அதிகாரிகள், வாக்களிக்க வந்த 8 பேருக்காக புதிதாக ஒரு மின்னணு இயந்திரத்தை அனுப்பி வைத்தனா்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு,‘சீல்’ வைக்கப்பட்டதாலும், அதை திறப்பதற்கு தோ்தல் ஆணைய விதிமுறைகளில் அனுமதி இல்லை என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 8 வாக்காளா்களும் வாக்களித்தனா்.