தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு ஆயத்தம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆய்வு

திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை இடைத்தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியா் பிரதிக் தயாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :3 ஜூன் 2026, 4:18 am IST

திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை இடைத்தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியா் பிரதிக் தயாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளநிலையில், தோ்தல் ஆணைய அறிவுரையின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, ஆட்சியரக வளாகத்தில் உள்ள வைப்பறையில் உள்ள இயந்திரங்களை சரிபாா்க்க, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வைப்பறையானது செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

அங்கு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயாராக உள்ளனவா என்பதை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரதிக் தயாள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, கோட்டாட்சியா் சாலை தவவளன், தோ்தல் வட்டாட்சியா் சக்திவேல் முருகன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.