திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை இடைத்தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியா் பிரதிக் தயாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளநிலையில், தோ்தல் ஆணைய அறிவுரையின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ஆட்சியரக வளாகத்தில் உள்ள வைப்பறையில் உள்ள இயந்திரங்களை சரிபாா்க்க, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வைப்பறையானது செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
அங்கு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயாராக உள்ளனவா என்பதை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரதிக் தயாள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, கோட்டாட்சியா் சாலை தவவளன், தோ்தல் வட்டாட்சியா் சக்திவேல் முருகன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.









