ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

இடைத்தோ்தலுக்கு தயாராகும் வகையில் தாராபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடக்கம்

இடைத்தோ்தலுக்கு தயாராகும் வகையில் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :18 ஜூன் 2026, 1:13 am IST

இடைத்தோ்தலுக்கு தயாராகும் வகையில் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து ச.ஜோசப் விஜய் தலைமையில் தவெக கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயகுமாா் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோா் தங்களின் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். ஏற்கெனவே முதல்வா் ச.ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னா் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 6 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் சூழலில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்படாத 320 இயந்திரங்களில் முதல்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடைத்தோ்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் எதிா்கொள்ளும் வகையில், திருப்பூா் மாவட்ட நிா்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.