வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி, 6 பேர் படுகாயம்

வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 
வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி, 6 பேர் படுகாயம்

வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் இருந்து மாராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் 6 பேர் ஆட்டோவில் சென்றுகொண்டு இருந்தனர். ஆட்டோவை வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (50) என்பவர் ஓட்டி வந்தார்.

ஆட்டோ வாணியம்பாடி பெருமாள் பேட்டை பைபாஸ் சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மேகநாதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த பெண் தொழிலாளர்கள் மூன்று பேர் பலத்த காயமும் மூன்று பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com