தமிழகத் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டிணம், காட்டுப்பட்டி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு  மற்றும் வடமேற்கில் நகர்ந்து, தமிழகம் - புதுச்சேரி மற்றும் ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com