சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை முதல் வட  தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகதாகவும், நாளை மறுநாள் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலுரில் கனமழைக்கு பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கும். இதனால், நாளை, நாளை மறுநாள் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com