முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2022, 11:59 am IST

ஈரோடு: கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரயில்வே நிலையம் (ஆர்.எஸ்) அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற சன்னதி விநாயகர், கன்னிமூல கணபதி, மகா மாரியம்மன் கோயில் உள்ளது. 

Story image

இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில், மகா மாரியம்மன் கருவறை அருகே வசந்த மண்டபம், கோபுரம், கன்னிமூல கணபதிக்கு கோயில் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் விழா கடந்த 17ம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. 

கடந்த 18ம் தேதி காலை கணபதி ஹோமம், புனித நீர் எடுத்து வருவதல், மாலை 5 மணிக்கு முளைப்பாலிகை போடுதல், முனியப்பசாமி ஊர்வலம், தொடர்ந்து, விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகம், கும்பலங்காரம், ரக்ஷாபந்தனம், மகா மாரியம்மன் கும்பரூமாக பரிவார தெய்வங்களுடன் யாகசாலையில் சிறப்பு பூஜை, முதற்கால யாக பூஜை நடந்தது. 

Story image

நேற்று(19ம் தேதி) காலை 9 மணிக்கு புண்யாகம், சுதை சிற்பங்கள் கண் திறப்பு கலசம் வைத்து, 2ம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 3ம் கால யாக பூஜையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 5 மணிக்கு 4ம் கால பூஜை நிறைவு பெற்று, கலசங்கள் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, கோபுரத்தில் வைக்கப்பட்டு விநாயகர், மகா மாரியம்மன், ஆலய விநாயகர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனதி நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

இவ்விழாவில், கொளத்துப்பாளையம், பெருந்துறை, வடமுகம் வெள்ளோடு, பிச்சாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.