மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 15 ஆவது மாவட்ட பேரவை!

 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாவட்டப் பேரவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2022, 1:32 pm IST

கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாவட்டப் பேரவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியார் மண்டபம், விஜயா நினைவரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் வெ.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வி.தெட்சிணாமூர்த்தி வரவேற்றார். அரங்கத்தின் வாயிலில் கொடியேற்றப்பட்டு, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து பேசினார். 

மாவட்டப் பொருளாளர் எஸ்.செங்குட்டுவன் வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

Story image

அகவிலைப்படி சரண் விடுப்பு தொகையை உடனே வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி வழங்குவதை சத்துணவு ஊழியர்களை கொண்டு அமுல்படுத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை ரத்து செய்து, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். வலங்கைமான் பேரூராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அலுவலக வேலையாக வரும் பொதுமக்களுக்கு, வெளிப்புறத்தில் அமர்வதற்கு இருக்கை, குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால், டெல்டா பகுதிக்கு வேளாண் கல்லூரியை அமைக்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்தில், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் டி.தமிழ்சுடர், மாநிலத் தலைவர் மு.அன்பரசு, துணைத் தலைவர் ஆ.பெரியசாமி, மாவட்ட இணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் உ.சண்முகம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். நிறைவாக, மாவட்ட துணைச் செயலாளர் டி. இராஜசேகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.