பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலுக்கு திடீர் பூட்டு!

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோவிலுக்கு திடீரென பூட்டு பூட்டப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:27 pm IST

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலுக்கு திடீரென பூட்டு பூட்டப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகர் விஷ்ணுகாஞ்சி பகுதியில் உள்ளது தும்பவனத்து அம்மன் கோயில் . இத்திருக்கோயிலில் உள்ள தும்பவனத்தம்மன் பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. திருக்கோயிலில் இன்று சாமி கும்பிட வந்த பக்தர்கள் திடீரென கோயிலில் இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்தனர்.

சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சுமார் 4 மணி நேரமாக கோயில் முன்பாக காத்திருந்தனர். இது குறித்து திருக்கோயில் நிர்வாகிகளில் ஒருவரான குணசீலன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நான்கு மணி நேரம் ஆகியும் காவல்துறையினர் அல்லது அறநிலையத்துறையினரோ வராமல், சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் நீண்ட நேரம் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் கோயிலுக்கு முன்பாகவே காத்திருந்தனர். 

இதை குறித்து அறநிலையதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் திருக்கோயில் நிர்வாகம் மாற்றப்பட்டு அவர்கள் கோயில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

எனவே விரைவில் அதிகாரிகள் வந்து திருக்கோயிலிலை திறந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றார்கள். ஆனால் நான்கு மணி நேரம் ஆகியும் காவல்துறையினரோ, அறநிலையத்துறையினரோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.