எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!

தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதியதாக முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:59 pm IST



தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதியதாக  முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 6 பேராசிரியர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி  இயக்குநராக பணியாற்றி வந்த கே.நாராயணசாமி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சீனுவாசன், கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் திருப்பதி, கடலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும். திருச்சி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், தூத்துக்குடி மருத்தவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரிக்கும், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.