கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யவிடாமல் தடுத்தார் சசிகலா: அறிக்கை

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய விடாமல் சசிகலா தடுத்தார் என்று குற்றம்சாட்டியுள்ளது.

News image

சசிகலா(கோப்புப்படம்)

Updated On :18 அக்டோபர் 2022, 10:01 am

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வெளியான மருத்துவ அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததாக சுட்டிக்காட்டியிருக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய விடாமல் சசிகலா தடுத்தார் என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவக்குமார், அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நால்வர் மீது விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா - சசிகலா இடையே சுமூக உறவு இல்லாததால், தனது சுயலாபத்துக்காக மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை கிடைக்க விடாமல் சசிகலா தடுத்ததாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே, ஆஞ்சியோ செய்ய பரிந்துரை செய்தும், ஜெயலலிதா இறுதி மூச்சு வரை அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவேயில்லை. 

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா உள்ளிட்ட நால்வர் குற்றம் செய்தவர்களாகக் கருதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை வெளியிட்ட பொய் அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்படும்.

அதில் ஒரு அறிக்கையை பொய் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை பொய் அறிக்கை என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.