ஆத்தூரில் அதிமுகவினர் மறியல் போராட்டம்!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது. 
எடப்பாடி கே.பழனிசாமி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆத்தூர் நகர அதிமுகவினர்
எடப்பாடி கே.பழனிசாமி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆத்தூர் நகர அதிமுகவினர்


சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கைதை கண்டித்து ஆத்தூர் நகர அதிமுகவினர் ஊர்வலமாக பேருந்துநிலையம் வரை கோஷமிட்டுக் கொண்டே மறியலில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.மாதேஸ்வரன் ஆர்.எம்.சின்னதம்பி நகர செயலாளர்கள் அ.மோகன் எஸ்.மணிவண்ணன் தலைவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் க.ராமசாமி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் சின்னதம்பி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com