தமிழகத்தில் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.31) பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழையோ அல்லது மிக கன மழையோ பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com