மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் திறக்கப்படும்: அமைச்சா் எ.வ. வேலு

கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.

News image

கீழடியில் நடைபெற்று வரும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் எ.வ.வேலு. உடன், அமைச்சா்கள் கேஆா்.பெரியகருப்பன், பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோா்.

Updated On :31 ஆகஸ்ட் 2022, 9:55 pm

DIN

கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அகழ் வைப்பகக் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு, தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது: கீழடியில் ரூ. 12. 21 கோடியில் உலகத் தரத்தில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட 10, 210 -க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுக்கு பின்பு கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என்றாா்.

இதில், மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா், முதன்மை தலைமைப் பொறியாளா் ஆா்.விஸ்வநாதன், மண்டல தலைமைப் பொறியாளா் ரகுநாதன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் (பாரம்பரிய கட்டடக் கோட்டம்) எஸ்.மணிகண்டன், தொல்லியியல் துறை இணை இயக்குநா் ம.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.