ட்விட்டரில் ட்ரெண்டாகும் 'ஒற்றைச் சொல் ட்வீட்'டில் முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், சசிகலா உள்பட தமிழக அரசியல் தலைவர்களும் இணைந்துள்ளனர்.
அமெரிக்காவின் 'அம்ட்ராக்' என்ற ரயில் சேவை நிறுவனம் 'trains' என ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்ய அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஒற்றைச் சொல்லில் ட்வீட் செய்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'democracy' (ஜனநாயகம்) எனவும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'கிரிக்கெட்' எனவும் பதிவிட்டுள்ளனர். அதுபோல நாசா, 'universe' (பிரபஞ்சம்) என பதிவிட்டுள்ளது.
இதுபோல தமிழக அரசியல் தலைவர்களும் இந்த ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'திராவிடம்' எனப் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'தமிழ்நாடு' எனவும்,
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'தமிழன்' எனவும்
பாமக நிறுவனர் ராமதாஸ் 'சமூகநீதி' எனவும்
வி.கே. சசிகலா, 'ஒற்றுமை' எனவும்
துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 'அம்மா' என்றும்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தமிழ்த் தேசியம்' என்றும்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் 'மக்கள்'
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ 'மனிதநேயம்' என்றும் பதிவிட்டுள்ளனர்.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் - 'வறுமை ஒழிப்பு'
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - சனநாயகம்
அதிமுக ட்விட்டர் கணக்கில் - 'எடப்படியார்'
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் - 'வீரப்பெண்மை'
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் - 'சமத்துவம்'
திமுக எம்.பி. கனிமொழி - 'பெரியார்'
சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் - 'ஒற்றுமை' என்றும் ட்வீட் செய்துள்ளனர்.
இதையும் படிக்க | அமெரிக்க ஓபனில் தோல்வி: ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ்!
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் என ட்வீட் செய்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விடுதலை என டிவீட் செய்துள்ளார்.
இதையும் படிக்க | பைக்கை தொட்டது குற்றமா? தலித் மாணவருக்கு நேர்ந்த கொடுமை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


