புரட்சியை ஏற்படுத்தும் புதுமைப் பெண் திட்டம்: அரவிந்த் கேஜரிவால்

தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண் திட்டம்’ உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ‘புதுமைப் பெண் திட்டம்’ என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 
புரட்சியை ஏற்படுத்தும் புதுமைப் பெண் திட்டம்: அரவிந்த் கேஜரிவால்

தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண் திட்டம்’ புரட்சியை ஏற்படுத்தும் புதுமைப் பெண் திட்டம் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

‘புதுமைப்பெண்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார். 

இதில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 26 தகைசால் பள்ளிகள், 5 மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

அப்போது, ஆசிரியர் நாள் வாழத்துகளை தெரிவித்தார். சமுதாயத்தின் அடிப்படை ஆசிரியர்கள் தான் என்றும், புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என கூறினார். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம். 

புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு என்னை அழைத்தபோது உண்மையிலேயே ஆச்சரியம் ஏற்பட்டது. ஒரு மாநில முதல்வர், இன்னொரு மாநிலத்துக்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை. அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து தில்லிக்கு வந்து பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று கூறியதுடன், அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

தில்லியைப் போல் தமிழ்நாட்டிலும் தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநில அரசும் நல்ல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன. அதன்போன்று ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களிடம் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 

தமிழக அரசின் இந்த திட்டம் மாணவியரின் இடைநிற்றலைத் தவிர்க்கும். உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் புரட்சிகரமான புதுமைப் பெண் திட்டம் என தெரிவித்தார். 

இந்தியா முழுவதும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. இந்தியாவில் 27 கோடி மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 18 கோடி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளை சீரமைத்து இந்தியாவில் கல்வியை நம்பர் ஒன்று என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 

மேலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே என தெரிவித்த கேஜரிவால், தனியார் பள்ளிகளுக்கு நிகரான அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளித்தால் மட்டுமே இந்தியா வளர்ந்த நாடாக மாறும். அனைவருக்கும் இலவசமான, தரமான கல்வி கிடைக்கப் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மத்திய , மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும் என்று கூறினார். 

மேலும், இனி கல்வி சார்ந்த புதிய திட்டங்களை தொடங்கும் போதும் மு.க.ஸ்டாலின் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன். நானும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க தில்லி வருமாறு மு.க.ஸ்டாலினை அழைப்பேன் என அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com