இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து நடை பயணத்தை புதன்கிழமை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டு இருந்தார். 

கோவையிலிருந்து ரயில் மூலமாக புறப்பட்ட அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.

அவரை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரது உதவியாளர்கள்  அரிகரன்,  பொன்னுசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com