புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் நகரம் வீரமாகாளி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை(செப்.8) நடைபெறுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: வாட்ஸ்ஆப் மூலம் புலிக் குட்டி விற்பனை! வேலூரில் இளைஞர் கைது
அதற்கு பதிலாக 24.9.2022 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.