தீபாவளி: சென்னை தீவுத்திடலில் 15 நாள்கள் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. 
தீபாவளி: சென்னை தீவுத்திடலில் 15 நாள்கள் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையின்போது சென்னை தீவுத் திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கான அறிவிப்பை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் வருகிற அக்டோபர் 11 முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com