பணம் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையில் உச்சநீதிமன்றம் தளர்வு அளித்துள்ளது.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த புகாரில் கைதான ராஜேந்திரபாலாஜி ஜாமீனில் வெளியே இருக்கிறார். இந்த நிலையில் பண மோசடி வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம் என அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் நிபந்தனையை தளர்த்தியது. அதேசமயம், விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- விரைவில் தில்லி செல்லும் லாலு, நிதிஷ்!
பாஸ்போர்ட்டை புதுப்பித்துக்கொள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், வெளிமாநிலங்களுக்கு பயணிக்கும் வகையில் நிபந்தனை தளர்வு தேவை என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து விசாரணையை மேலும் 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?

உ.பி.யில் பள்ளி அருகே புகைமூட்டம்: 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


