முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே ரூ.80 கோடி செலவில் பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், கடலுக்கு நடுவே அமையவுள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பாா்வையிட வசதியாக 650 மீட்டா் கண்ணாடிப் பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.
நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது.
திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிக்க | மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மாற்றம் பெறும் கேரளம்!

எஸ்எஸ்எல்சி தோ்வு இன்று தொடக்கம்: அரியலூா் மாவட்டத்தில் 10,113 மாணவா்கள் எழுதுகின்றனா்

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பாஜகவுடன் விஜய் கூட்டணியா? நயினாா் நாகேந்திரன் பதில்
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

