தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாநகராட்சி குப்பை லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

சென்னை பேசின் பாலத்தில் மாநகராட்சி குப்பை லாரி கவிழ்ந்து தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 12:33 am

DIN

சென்னை பேசின் பாலத்தில் மாநகராட்சி குப்பை லாரி கவிழ்ந்து தொழிலாளி இறந்தாா்.

பேசின்பாலம் யானைக்கவுனி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கில், குப்பை கொட்டுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் இருந்து ஒரு லாரி புதன்கிழமை வந்தது. லாரியின் ஓட்டுநா் புளியந்தோப்புா் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (52) குப்பையை கொட்டுவதற்காக, லாரியின் பின்பகுதியில் தொட்டி போன்ற அமைப்பை தூக்குவதற்குரிய மோட்டாரை இயக்கினாா்.

அந்த நேரத்தில் லாரி திடீரென பாரம் தாங்காமல் பின்புறமாக கவிழ்ந்தது. அப்போது பின்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கிளீனா் கிருஷ்ணாம்பேட்டையைச் சோ்ந்த தமிழ்செல்வன் (27), லாரியின் அடியில் சிக்கி இறந்தாா்.

வியாசா்பாடி தீயணைப்பு படையினா் மீட்பு பணியில் ஈடுபட்டனா். லாரியின் அடியில் சிக்கியிருந்த தமிழ்செல்வன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேசின்பாலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.