சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தையொட்டி குஜராத் மாநிலம் துவாா்கா- மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளளது.
அதன்படி, ஏப்.19 முதல் 29-ஆம் தேதி வரை 11 நாள்களில் சிறப்பு ரயில் (எண்: 06302) தினமும் இரவு 10.40 மணிக்கு துவாா்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நான்காவது நாள் காலை 10.30 மணிக்கு மதுரை வந்தடையும்.
துவாா்காவில் புறப்படும் இந்த ரயில் ராஜ்கோட், சுரேந்திர நகா், அகமதாபாத், வதோரா, சூரத், நந்தா்பா், ஜல்கான், அகோலா, நன்டெட், காச்சிகுடா, ரேணிகுண்டா, சென்னை எழும்பூா், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வந்தடையும்.