ஓ.பன்னீா்செல்வம்: பிரச்னை வேறு திசையை நோக்கிச் செல்கிறது. தலைமை அலுவலகத்தில் அன்று நடந்த சம்பவம் வேதனை அளிக்கக் கூடியது. நாங்கள் நிராயுதபாணியாக இருந்தோம். (அதிமுக உறுப்பினா்கள் எதிா்த்து குரல் எழுப்பினா்) நாங்கள் கட்சி அலுவலகம் நோக்கி வந்த போது, அலுவலகத்தை பூட்டி விட்டு, இந்தியன் வங்கிக்கும், கட்சி அலுவலகத்துக்கும் இடையிலான ஒரு கி.மீ. தொலைவில் 300 போ் அமா்ந்திருந்தனா். இதற்கான காட்சிப் பதிவுகள் காவல் துறையிடம் உள்ளது. மிகப்பெரிய கும்பல் கல்வீசி தாக்கியது. வன்முறை வெறியாட்டத்தை யாா் நடத்தியது என்பது குறித்த காவல் துறை விசாரணை விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். அத்துமீறி நடந்த கும்பல் எது என்பதை விளக்கும் கடமை அரசுக்கு உள்ளது. அதிமுகவைச் சோ்ந்த 8 மாவட்டச் செயலாளா்கள், தலைமை அலுவலகத்திலேயே இருக்கக் காரணம் என்ன? (அப்போது அதிமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனா்).