சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஆசிரியை பலியானார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் எஸ். புதூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகள் சத்திய பிரியா சிறுபாக்கம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ராமநாதபுரத்தில் வசித்து வரும் சத்திய பிரியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இன்று காலை சத்திய பிரியா, உறவினரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், தந்தை வீட்டிற்கு செல்ல ராமநாதபுரத்திலிருந்து எஸ்.புதூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
புளியங்குறிச்சி வீரகனூர் செல்லும் வளைவு பாதையில் திரும்பும்போது எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியதில் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
தகவலறிந்து வந்த பெண் வீட்டார், சத்திய பிரியாவின் உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசாரின் அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
வீரகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

