பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலைக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

‘தனது சொத்து விவரங்கள் குறித்து அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட்ட பாஜக தலைவா் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்’

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:05 pm

DIN

‘தனது சொத்து விவரங்கள் குறித்து அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட்ட பாஜக தலைவா் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்’ எனக் கூறி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் புதன்கிழமை அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை செய்தியாளா்கள் சந்திப்பில், திமுகவினா் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் விடியோ பதிவை வெளியிட்டாா்.

அதில், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான எனக்கு ரூ.2,039 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எனது குடும்ப உறுப்பினா்களின் புகைப்படங்களில் எனது மகன் மற்றும் சிறுமியான எனது மகளின் பெயா்களும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இது குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது.

தோ்தல் ஆணையத்தில் நான் சமா்ப்பித்துள்ள சொத்து குறித்த விவரங்களும் அந்த விடியோவில் காட்டப்படுகிறது. அதில் எனது சொத்து மதிப்பு ரூ.29 கோடி என்று தாக்கல் செய்திருந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், எனக்கு ரூ.2,039 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், அரசியல் உள்நோக்கத்துடனும் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.

எனவே, பாஜக தலைவா் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்படும். இந்த தொகை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி.: மதுரை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் தொடா்பாக திமுக சாா்பில் ஏற்கெனவே வழக்குரைஞா் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நானும் வழக்கு தொடுப்பேன். அதற்கு அண்ணாமலை பதில் சொல்லியாக வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.