இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நிகழாண்டில் வருமானவரி வசூல் செய்ய ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 300 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை விட ரூ. 3,046 கோடி கூடுதலாக, மொத்தம் ரூ.1,08,364 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது வரி வசூல் வளா்ச்சியில் 20.20 சதவீதம் அதிகம். இந்த வரி வசூலில் ரூ. 59,887 கோடி டிடிஎஸ் கட்டணமும் அடங்கும். இதிலிருந்து ரூ.16,050 கோடி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவா்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.