இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமா்வு, ‘விசாரணை நீதிமன்றத்தின் பதிவுகள் இல்லாத நிலையில், உயா் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததோடு, அபராதத் தொகையையும் உயா்த்தியது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது. நியாயமான சட்ட நடைமுறை என்பது, விசாரணை நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவை கேள்விக்குட்படுத்துவதற்கான வாய்ப்பை மேல்முறையீடு செய்யும் நபருக்கு அளிப்பதையும் உள்ளடக்கியதாகும். விசாரணை பதிவுகள் கிடைக்கும்போது மட்டுமே மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இதைச் செய்ய முடியும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரை தண்டனையிலிருந்து விடுத்து உத்தரவிட்டனா்.