சிதம்பரம்: வளையமாதேவிக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
என்எல்சி இந்தியா நிறுவனம் விவசாயிகளின் நெற்பயிரை அழித்து வாய்க்கால் அமைக்கப்பட்டு வரும் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சின்னதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், தேன்மொழி ஆகியோர் விவசாயிகளை சந்திக்க செவ்வாய்க்கிழமை காலை சென்ற போது சேத்தியாதோப்பு கூட்டு ரோடு அருகே டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையிலான காவல் துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிக்க: திருப்பூரில் குப்பை லாரி மோதி தொழிலாளி பலி
பின்னர், இதனை கண்டித்து மார்க்சிஸ்ட். கம்யூ கட்சி நிர்வாகிகள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சரவணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.