சென்னை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளன்று அதிகளவிலான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தைவிட அதிக பதிவுகள் நடைபெறும்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதால் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக டோக்கன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.