தமிழ்நாடு
மகளிர் உரிமைத்தொகை: முதல்வர் நாளை ஆலோசனை!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வியாழக்கிழமை இன்று (ஆக. 3) நடைபெற்ற முகாமில், 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட முகாம்கள் வரும் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.