பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் 

விராலிமலை அருகே கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபட்டனர். 

News image

பேராம்பூர் வீரபத்திரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து ஆசீர்வாதம் ஆசீர்வாதம் வழங்கிய கோயில் பூசாரி.

Updated On :4 ஆகஸ்ட் 2023, 7:33 am

விராலிமலை: விராலிமலை அருகே கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் வீரபத்திரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நள்ளிரவு விடிய விடிய நடைபெற்றது. 

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி வழிபாடு நடத்தினர். 

இதில் விசேஷ வழிபாடாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டு சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையொட்டி, இந்த கோயிலுக்கு தேனி மாவட்ட பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வரிசையாக சன்னதி முன்னால் தரையில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து கோயில் பூசாரி, பக்தர்களின் ஒவ்வொருவர் தலையிலும் தேங்காயை உடைத்து ஆசீர்வாதம் வழங்கினார். 

பல்வேறு விதமான வழிபாடுகளில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவது வினோத வழிபாடாக பார்க்கப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.