டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நெல்லை அருகே கோயில் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை

நெல்லை அருகே வீரவநல்லூரில் கோயில் தகராறில் குமார்(40) என்பவர் வியாழக்கிழமை மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:08 pm

DIN


நெல்லை அருகே வீரவநல்லூரில் கோயில் தகராறில் குமார்(40) என்பவர் வியாழக்கிழமை மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பண்ணையார் குமார் என்கிற குமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் சொந்தமாக ஜே.சி.பி., லாரி உள்ளிட்டவை வைத்துள்ளார். மேலும் காண்டிராக்டர் தொழிலும் செய்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 2 -ஆம் தேதி வீரவநல்லூரில் உள்ள திரௌவபதி அம்மன் கோயில் திருவிழா கால்நாட்டுடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.

Story image

மனைவியுடன் பண்ணையார் குமார் என்கிற குமார்.

இந்த நிலையில், இந்த கோயிலில் குமாரின் சமுதாய மண்டகப்படி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவில் வெடி வெடிக்கும் போது அதே மண்டகப்படியைச் சேர்ந்த சிலருக்கும், குமார் தரப்பினருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பண்ணையார் குமார் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வீற்றிருந்தான் குளத்திற்கு சென்றபோது அதை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பைக்கில் சென்று குமாரை குளத்தில் துரத்திச் சென்று சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பியது. 

இந்த சம்பவத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.

தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சென்ற வீரவநல்லூர் போலீசார், குமார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோயில் திருவிழா தகராறு காரணமாக தான் குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் முன்விரோத காரணமா? என பல்வேறு கோணங்களில் வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.