பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அவிநாசி அருகே எரிவாயு உருளை வெடித்து தொழிலாளி பலி!

அவிநாசி அருகே கானூரில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் எரிவாயு உருளை வெடித்து வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை பலியானார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2023, 9:51 am

DIN

அவிநாசி: அவிநாசி அருகே கானூரில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் எரிவாயு உருளை வெடித்து வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை பலியானார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Story image

அவிநாசி அருகே கானூரில் உள்ள இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாநில தொழிலாளிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

Story image

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல நிறுவனம் இயங்கத் தொடங்கியது. திடீரென நிறுவனத்திற்குள் இருந்த எரிவாயு உருளை வெடித்து விபத்துக்குள்ளானது. இதில்  உத்திர பிரதேசத்தை சேர்ந்த ராம்விலாஸ் மகன் ராஜேஷ்(22) சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேவூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.