சென்னை: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் நகர் - சென்னைக்கிடையே தினசரி நேரடி விமான சேவையை, 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு வெள்ளிக்கிழமை இரவு(ஆக.11) முதல் மீண்டும் தொடங்கியது.
மேடான் நகர் - சென்னைக்கிடையே தினசரி நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் சென்னைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.